கிருஷ்ணாஜியுடன் நாற்பதாண்டுகள் ....என்ற நூலில்லிருந்து திரு பரமேஸ்வரன் அவர்கள் திரு கிருஷ்ணஜியுடன் காஷ்மீரில் தங்கியிருந்த போது காஷ்மீர் ராஜகுடும்பத்திற்கு அளித்த விருந்தில் ஒரு முக்கிய அயிட்டமான ராஜா ச்வீட்டைப்ப்றிய குறிப்பு.
ஆப்பிள் அல்வா தேவையானவை
புளிப்பில்லாத ஆப்பிள்கள்
சர்க்கரை 300 கிராம் ...நெய் 100 கிராம் பாதாம் பருப்பு 50 கிராம் பிஸ்தா 50 கிராம் ஏலப்பொடி அரை ஸ்பூன் குங்குமப்பூ சிறிது
பாதாம். பிஸ்தா இவற்றை ஊறவைத்து தோல்நீக்கி வைத்துக்கொள்ள வேண்டும் ஆப்பிள்களை தோல்நீக்கி துருவி வைத்துக்கொள்ள வேண்டும்
ஒரு கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சர்க்கரையுடன் சிறிது நீர் சேர்த்து பாகு தயார் செய்து கொள்ளவும்
பாகு நூல் பதம் வந்ததும் துருவு வைத்துள்ள ஆப்பிளையும் நெய்யையும் ஒன்ராகப்போட்டு கிளறவும். கொதி வந்ததும் அட்ப்பை நிதானமாக எரியவிடவும் தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்கவும் அல்வா வாணலியில் ஒட்டாமல் சுருண்டு வரும் பதத்தில் இறக்கி ஏலப்பொடி குங்கமப்பூ போட்டுக்கிளறி ஒரு அழகான பாத்தித்தில் மாற்றிக்கொள்ளவும் பின்னர் பாதம் பிஸ்தா பொடியாக நறுக்கி அல்வாவின் மேல் தூவி அலங்கரிக்கவும் நன்கு ஆறியபின்னர் துண்டுகள் போடலாம். இந்த அல்வா உடம்புக்கு மிகவும் நல்லது.
இனி வரும் நாட்களில் வேறொரு குறிப்பை காணலாம்
1 comment:
Nice. Please post more like this
Post a Comment